![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgTwO26g7jWCfdPYN4qWg5vL0SV3VC3fe2MtKIMAdb09Fa17aQ0FB1GoZFPG-HuVm3aapWEmPig744kXZ6ofA1dUaW6uIApac42bjhuDjqZKdaNI4RWeQ8vX7Q5Wa3l7NRu0Pd46pxviYw/s320/Picture%25202711%2520%2528Small%2529%5B1%5D.jpg)
என் நினைவுகள் எனை விட்டு -- நகர்ந்தன
அவளின் மொழி அழகில்
வளையல்கள் சலசலக்க சலங்கைகள் சினிசினுங்க
புன்னகை பூக்கும் போது .....!!!!
பிரபஞ்சத்தின் பேரழகி அவள் மட்டுமே ....!!
என் தனிமைகளை சொந்தமாக்கினாய் ---பின்
இரவுகளை சொந்தமாக்கினாய் ...... என் சொல்வது
தடுமாறுகிறது இளமை ....!!!!
கையில் அகப்படும் காகிதங்களில்
கவிதை என்று கிறுக்க படுகின்றன --- என் உளறல்கள்
உன் சுடர் ஒளி பார்வயில் நின்று போகின்றன --- என் இயக்கங்கள் !!!
சம்மதத்தால் நிறுத்திவிடு என் கவிதைகளை ...
தப்பித்து கொள்ளட்டும் ---- தாய் மொழி