![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikIMVXV2pI_J32RlYGRpZVHcMUSfpRx1E1MbgHGPPZ_2JxCwyMi4kV-BOZaykUiLspL_UIG5L9lx0SsZ5ri3fgPJDHRrv9CpfLDKh0FsEawhwfYIYHW7GaeibF8mSfyJ0mnnT_R6zrnZc/s320/rose%2520005%5B1%5D.jpg)
பால்யத்தில் கண்ணீர் துடைத்தவள்
என் பள்ளி நாட்களில் நட்பு மலராய் மனம் வீசியவள்
அதிகாலை பொழுதையும் மஞ்சள் மாலையையும்
என்னில் அழகாக்கியவள்
பிறிதொரு நாளில் மொத்தமாய் விலகி சென்றால் --- குடும்பத்துடன்
சிறு வயதின் சலனங்கள் புரியவில்லை --- அப்போழ்து
ஆனால் நினைவுகள் மட்டும் நீங்காமல் நிழலாடி கொண்டிருக்கிறது ....
என்னில் நினைவாக விட்டு சென்றது
அவள் முகமும் அழகிய புன்னகையும் .....
இன்னமும் காத்து கொண்டிருக்கின்றேன்
என் இதயம் நிறைந்த அவளுக்காக ......?
No comments:
Post a Comment